Tuesday, September 16, 2025

ஆசை நூறுவகை

 ஆசை நூறுவகை 



திருமந்திரம் - 2033

அஞ்சும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்கா அறிவு  அறிந்தேனே.


புலன்களால் உண்டாகும் ஆசையை அடக்கினால் மட்டுமே யோக  வாழ்வை  அடைய  முடியும் என்று அறிவற்றவர்கள்தான் சொல்வார்கள். புலனாசையை, வானில் வாழும் தேவர்களாலும், அடக்க முடியாது. அதற்கு தேவர்களும் விதி விலக்கல்ல. அடக்க இயலா காமத்துடன் சென்று, முனிபத்தினியான அகலிகையின் சாபம் பெற்றவன் தேவர்களின் கோமான்  இந்திரன். புலன்களை அடக்குவதால் இன்னொரு கோளாறும் உண்டு;   நாமும் ஜடப்பொருள்களைப்போல் ஆகி நம் வாழ்வும் இயந்திர  வாழ்வாகி விடும்.

எனவே, புலனாசையை அடக்காமல், புலன்களின் இயக்க உண்மையை அறிவதே யோக வாழ்விற்கு வழிகாட்டியாகும்.

புலன்களின் உண்மைத்தன்மை அறிந்து யோக வாழ்விற்கு வழி காட்டும் திருமூலரின் திருமந்திரத்தை நாம் தொடர்வோம்.


 

Sunday, September 14, 2025

புலனறிவே யோகம்

புலனறிவே  யோகம் 


திருமந்திரம் - 2023

ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில 
பாகனும் எய்த்து  அவைதாமும் இளைத்தபின் 
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.

ஐந்து மதம் கொண்ட யானைகள் இருக்கின்றன. அவைகள் அமைதியாக அதன் கட்டுத்தறியோடு இணைந்து இருப்பதில்லை. இதனால் யானைகளை பராமரிக்கும் பாகனும் ஓய்ந்துபோய், யானைகளும் சக்தி இழந்து இளைத்தபின் மீண்டும் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாது.

ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கையை அடக்க முடியாமல் தறிகெட்டு அலைவது  உடல். முதுமையில் உடல் ஓய்ந்த நிலையில் புலன்களின் வேட்கை குறைந்து சுகமான  யோக வாழ்வை தேடினாலும் அடைய முடியாது. 

நம் உடலில் ஆற்றல்  உள்ள போது,  புலன்வழி போகாமல், யோக வாழ்விற்கு  பயிற்சி செய்ய வேண்டும்.



Monday, August 11, 2025

உனக்காக எல்லாம் உனக்காக

 /உனக்காக எல்லாம் உனக்காக இந்த உடலும் உயிரும் ஒட்டி இருப்பது உனக்காக/


நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கொடுக்காதே கட்சி கொடுக்காதே.. நீ கட்சியை விட்டு தள்ளி இருந்தா நிதி கொடுக்காதே..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கட்சிக்குள்ளே வந்து காலம் தள்ளுவது நிதிக்காக..

கொஞ்சம் கட்சிக்குள்ளே வந்து வேலைய செய்வேன் அதுக்காக..

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

ஊருக்குள்ளே வந்து காரு  பந்தயம் நடத்தணுமா  இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

ஊருக்குள்ளே வந்து காரு பந்தயம்  நடத்தணுமா  இல்ல மேட போட்டு பொங்கி பொங்கிப் பேசணுமா?

பேந்து விடும் ரோடு  காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா? 

பேந்து விடும் ரோடு  காண்ட்ராக்ட்டு கொடுக்கணுமா? 

இல்ல ஆத்து  மணல  அள்ள  அள்ள லைசென்ஸ்   எடுக்கணுமா?

நிதிக்காக எல்லாம் நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

இந்திர லோகத்திலே இந்திரனே நின்னாலும்     
தேர்தலில்  பணத்த  அள்ளி வீசி ஜெயிச்சிடுவேன்.

கந்தர்வன் போல  வந்து  ரம்பைகள்  அழகை  ருசிச்சிருவேன்.

கந்தர்வன் போல  வந்து  ரம்பைகள்  அழகை  ருசிச்சிருவேன்.

நீட்டு  ரகசியத்தை ரகசியமா வச்சிக்குவேன். மதுபாட்டில்  ஆனாலும் கூட்டு சேந்து நிதி              தேத்திடுவேன்.

நிதிக்காக இன்ப  நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..

நிதிக்காக இன்ப  நிதிக்காக 

இந்த கட்சிப்பதவியில்   ஒட்டி இருப்பது நிதிக்காக..


கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்

 'கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்..'

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை..  கொட்டி  கொட்டி..

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்

கொட்டி  கொட்டி  மூட்டை..  கொட்டி  கொட்டி..

பேச்சினில் என்றுமே இனிமையில்லை 
சொல்லும் வார்த்தையில்  உறுதி இல்லை.

பேச்சினில் என்றுமே இனிமையில்லை 
சொல்லும் வார்த்தையில்  உறுதி இல்லை.
கொண்ட கொள்கை எல்லாம் காற்றினில் பறக்க 
பொய்யும் புரட்டுமாய் உரக்கவே  பேசிடுவார்.

கோட்டைக்குள்  சென்று கொடிதனை நாட்டியென்  மக்களுக்காக நிதி திரட்டிடுவேன்.. 

சபாஷ்..

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.  

சொல்ல நினைத்ததை மறந்திடுவார்   
எழுதி தந்ததை  உளறிடுவார்

சொல்ல நினைத்ததை மறந்திடுவார் 
எழுதி தந்ததை  உளறிடுவார்
சொந்த மக்கள் எல்லாம் கால்விரல் பார்க்க     
தற்குறியாகவே  பேசி முடிப்பார்.

ஆட்டு மந்தை கூட்டம் சேர்த்து ஆடிப்பாடி நடித்திடுவேன்..

சபாஷ்.. 

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை..  கொட்டி  கொட்டி..

சொந்தப் புத்தியும் பிறப்பிலில்லை  
சொல்வோர் புத்தியும் கேட்பதில்லை  

சொந்தப் புத்தியும் பிறப்பிலில்லை  
சொல்வோர் புத்தியும் கேட்பதில்லை  
சட்டையை கிழித்து  ஊருக்கெல்லாம்  காட்டி
சட்டசபையை  விட்டு  ஓடிடுவார்.  

பணத்துக்காக கலங்க மாட்டேன் காசை கொடுத்து வெற்றி காண்பேன் 

சபாஷ் 

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

கொட்டி  கொட்டி  மூட்டை கதை அளந்து 
கோட்டையின் உள்ளே  இடம்  பிடிப்பார்.    

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.'

ஆண்டவன்  படைத்தது மனிதன் என்றாலும் மதங்களைப்  படைக்கவில்லை.
மதங்களை படைத்தது  மனிதன் என்றாலும் மனிதத்தைப் படைக்கவில்லை.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

வானத்தில்   கருந்துளைகள் சவாலாகலாம்   அதை 
எண்ணத்தில்  வைத்திருந்தால்   அறிவாகுமா?

வானத்தில்   கருந்துளைகள் சவாலாகலாம்   அதை 
எண்ணத்தில்  வைத்திருந்தால்   அறிவாகுமா?

நதிவெள்ளம் கடல்  நோக்கிப்  பாய்ந்தோடுமே

நதிவெள்ளம் கடல்  நோக்கிப்  பாய்ந்தோடுமே  அதை   
விதியென்று ஊர்  சொல்லி வழி  மாற்றுமா? 

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன் 
இனம்காக்க  உறவாடி உயிர் போக்குமே 

மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன் 
இனம்காக்க  உறவாடி உயிர் போக்குமே

தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் 
தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் தன் 
மனம்மகிழ பகிர்ந்துண்டால் பசி தீருமே.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

மேகங்கள் வான்சென்று  மழை பெய்திடும்  
தேகத்தில்  உயிர்ப்பூ க்கள்  அமிழ்தாகிடும் 

மேகங்கள் வான்சென்று  மழை பெய்திடும்  
தேகத்தில்  உயிர்ப்பூ க்கள்  அமிழ்தாகிடும் 

காலம்தான் உனக்கென்று  காத்திருக்குமா
காலம்தான் உனக்கென்று  காத்திருக்குமா உடல் 
கோலம் தான் இழந்தபின் எழில் கூடுமா?

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

Sunday, June 22, 2025

உதிரப்பிறந்த பிஞ்சுகள்

உதிரப்பிறந்த பிஞ்சுகள்




எது நடக்கக்கூடாது என்று உலகம் எதிர்பார்த்ததோ, அது நடந்து விட்டது.

ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்கள் அமெரிக்கர்களால் தகர்ப்பு. கொக்கரிக்கும் டிரம்ப்.

இதனால் ஈரான் மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. மத்திய தரைக்கடல் நாடுகள் அனைத்தும் நேரடி பாதிப்பில். அவர்களால் எண்ணெய் மட்டும் எடுக்க முடியும். குடி நீருக்கு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர்தான் ஆதாரம். கடல் நீர் அணுக்கதிர்களால் மாசுபடும் நிலை இப்போது. 

ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் குடி நீருக்கு சமமாகிவிடும்.

போர் ஒழிக!

போர் வேண்டாம். பேரழிவைத்தரும் போர் வேண்டாம்.

இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தம். மண்ணில் பிறந்த அனைவருக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு.

இறைவன் சந்நிதியில் சிறப்பு அனுமதி யாருக்கும்  இல்லை. யாருக்கும் யாரையும் கொல்லும்  உரிமை இல்லை, குறிப்பாக பொது மக்களை.

'காமெனியை கொன்றிடுவோம். அவன் இருப்பிடம் தெரியும்.' - கொக்கரிக்கிறான் டிரம்ப். இவன் போருக்கு சம்மந்தமில்லாத அமெரிக்கன். சீனாவோ உளவுக்கப்பல்களை போரின் எல்லைக்குள் நிறுத்தி வைக்கிறது, அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கையாக. ஈரான் - இஸ்ரேல் போரினால் உலகமே இரண்டுபட்டு  நிற்கிறது. 

ஏவுகணைகள் ஏற்படுத்தும் அழிவுத்திறனை  எதிர் அணிகள் பெருமையாக பேசி, வேடிக்கை பார்க்கிறார்கள். போரினால் பாதிக்கப்படக்கூடிய பொது மக்களில், குழந்தைகள், வயோதிகர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்ற பாகுபாடில்லை. 

பசித்து அழும் குழந்தைக்கு பால் தர முடியவில்லை என்றால், தன் பசியை பொறுத்துக்கொள்ளும் அன்னையால் இந்த வேதனையை தாங்கிக்கொள்ள முடியுமா? எண்ணற்ற பிஞ்சுக்குழந்தைகளின் பசிக்குரல் யாருக்கும் கவலையை தராதா?

இது மிகவும் கொடுமையானது. அனைத்து தர்மங்களையும் மீறியது. இவர்களுக்கு அறமே எமனாக அமையும்.

திருமந்திரம் - 198

கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை 
வல்லடிக்  காரர் வலிக்கயிற்றால் கட்டிச் 
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை 
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே

கொல்லு. குத்து என்று சொல்பவர்கள் மனிதர்களல்ல மிருகங்கள். இவர்களை எம தூதர்கள் தங்களது பாசக்கயிற்றால் கட்டி ஓட்டி சென்று நெருப்பின் வாயிலில் நிற்கவைத்து, நரகத்தை காட்டுவார்கள். 

*** *** ***


Friday, June 20, 2025

பொட்டு வைத்த முகம்

பொட்டு வைத்த முகம் 

  



'எடுத்துக்கோ..' - கைகட்டி நின்றிருந்த சிறுவனிடம் தலைமை ஆசிரியர் சொன்னார்.

இரண்டு வெள்ளை சாக்பீஸை எடுத்த குமாரின் கண்களில் பக்கத்தில் இருந்த கலர் சாக்பீஸ் கண்ணில் பட்டது.  கண்கள் விரிய ஆச்சர்யமாக அதை பார்த்தான்.

'சார், சாக்பீஸ்' - என்று சொல்லியபடியே, சாக்பீஸ் வாங்கி வர சொன்ன  வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தான்.

'டேய்.. ஹெட்மாஸ்டர் கிட்ட கலர் கலரா சாக்பீஸ் இருக்குடா..' - என்று தான் பார்த்ததை பக்கத்தில் அமர்ந்திருந்த  செல்வாவிடம் சொன்னான்.

'லக்குடா உனக்கு. நாளைக்கு நான் போய் எடுத்துட்டு  வருவேன். நானும் பார்ப்பேன்.' - செல்வா பொறாமையோடு சொன்னான்.

'சாக்பீஸ் செஞ்சு பாக்கலாமா? எங்கம்மா வீட்டுக்கு வெள்ளை அடிக்க சுண்ணாம்பு கல் வேக வச்சிருக்காங்க.' - என்றான் குமார்.

'எங்க வீட்லயும் சுண்ணாம்பு இருக்கு. இன்னிக்கு செய்யலாம்.' - சந்தோசமாக சொன்னான் செல்வா.

இவர்களுக்கு வெள்ளையாக இருப்பதெல்லாம் சுண்ணாம்புதான்.

*** *** ***

'பெல்லடிச்சிட்டாங்க, வாடா போலாம்' - என்ற செல்வாவின் முகத்தை பார்த்தான் குமார்.

'ஐயோ.. நான் விபூதி வெக்கலடா.' - திருநீறணிந்த செல்வாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே கத்தினான் குமார்.

'போச்சு. சார், உன்ன வச்சு வெளுக்கப்போறார்.' - மூன்றாம் வகுப்பு ஆசிரியர் திருநீறணியாமல் யாரும் வகுப்புக்கு வரக்கூடாது என்று கட்டளை போட்டிருக்கிறார்.

ஹிஜாப், தொப்பி, சிலுவை அணிந்த சிறுவர், சிறுமிகளுக்கும் இந்த விதி பொருந்தும். விதி எல்லாருக்கும் பொதுவானது. அந்த ஆசிரியர்  வகுப்பில் மட்டும் எல்லோரும் திருநீறணிந்திருப்பார்கள்.

என்ன செய்வதென்று திகைத்து நின்ற குமார், வேகமாக சென்று பள்ளி சுவற்றில் அடித்திருந்த சுண்ணாம்பை விரல்களில் தேய்த்து நெற்றியில் வைத்துக்கொண்டான்.

'அப்பாடா.. இன்னிக்கு தப்பிச்சேன்டா..'

*** *** ***

'பொட்டு வைத்திருந்தால் அது இந்தியப்பெண். நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்திருந்தால் அது வடஇந்தியப்பெண். கொஞ்சம் சந்தனம் வைத்திருந்தால் நம்ம கேரளம். பொட்டுடன் திருநீறு வைத்திருந்தால் அது நம்ம தமிழ்ப்பெண்.' - வெஸ்ட்மீடில் இரயிலில் ஏறிய திருநீறணிந்த பெண்ணைப்பார்த்ததும், குமாரின் சிந்தனை  இப்படியாக ஓடியது.

'நம் இனமடா..' - என்ற எண்ணம் சட்டென்று ஒட்டிக்கொண்டது.

பளிச்சென்ற ஒரு தெய்வீக அம்சம் இந்தியப்பெண்களின்  முகத்தில் ஒளிர்வதாக தெரிவது, தனக்கு மட்டும்தானா என்ற சந்தேகம் எப்போதும் குமாருக்கு உண்டு.

இந்தியப் பெண்கள் சேலை கட்டுவதும், பூ வைத்து பொட்டு வைப்பதும் தீராத ஆவலைத்தூண்டுகிறது ஆஸ்திரேலியாவில் வாழும் பெண்களுக்கு. அரசியல் பெண் தலைவர்கள் இந்திய விழாக்களில் சேலை மற்றும் பொட்டுடன் கலந்து கொள்வார்கள்.வெட்கம் அவர்கள் அறியாத ஒன்று. ஆனால், இந்த சமயங்களில் அவர்கள் முகத்தில் இழையோடும் வெட்கம் அபரிமிதமான அழகு.

மூன்றாம் வகுப்பில் தன்னை அறியாமல், ஆசிரியரின் கட்டுப்பாட்டில், நிகழ்ந்த ஒரு சின்ன படிப்பினை, இன்று உலகளாவிய நிலையில் நிலைத்திருப்பதை எண்ணி உள்ளூர சந்தோஷமாக இருந்தது குமாருக்கு.

*** *** ***

'சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்து காமனை எரித்தான்' - என்று புராணக்கதைகள் சொல்லிக்  கேள்விப்பட்டிருக்கிறோம்.

மூன்றாவது கண் இருக்குமிடம் நெற்றி. இதையே ஆக்ஞா என்றும் சுழு முனை என்றும் சொல்வார்கள். இங்குதான் பிட்யூட்டரியில் சுரக்கும் இனப்பெருக்கத்திற்க்கான ஹார்மோன்கள் வெளிப்படுவதற்கான இடம். அதாவது, காம உணர்வுகளைத்தூண்டும் எண்ணங்கள் இங்குதான் உருவாகிறது. 

நம்முடைய உணவு பழக்கம், சுற்றுப்புற சூழல்களால் காம உணர்வுகள் இல்லாத நேரமே இல்லை என்னும் வண்ணம் நம் உடல் படைக்கப்பட்டிருக்கிறது. காமத்தை  ஏதோ ஒரு வழியில் முறைப்படுத்த வேண்டும். 

மன்மதனை எரித்த சிவன் எதை பூசிக்கொண்டு  எரித்தானோ,  அதையே நாமும் செய்ய வேண்டுமானால் சுடுகாட்டுச் சாம்பலைத் தான் பூசிக்கொள்ள வேண்டும். ஆனால், அது சாதாரண மனிதர்களுக்கு சாத்தியமில்லை என்பதால் சித்தர்கள் நமக்கு திருநீற்றை வழங்கி சென்றிருக்கிறார்கள்.

திருநீறை அணிவதால் காம உணர்வுகள் முறைப்படுத்தப்படும். இன்னும் ஒரு நிலை மேலே சென்று, நமக்கு காம உணர்வால் வெளிப்படும் ஆசையை பாழ்படுத்தும்  முறையை காண்பிக்கிறார் திருமூலர்.

திருமந்திரம் - 1937

பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்றுபோய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.  

உள்ளம் உருக அனலை மூட்டுகின்ற  இடமே புருவ மத்தியான சுழு முனை.

அங்கே திருநீறை அணியுங்கள். காமன் உங்கள் வசப்படுவான், காலமும் உங்களை தாலாட்டும்.

*** *** ***

இந்துக்கள் ஓட்டுக்காக கோயிலினுள்  திருநீறணிந்து, இஸ்லாமியர்கள்  ஓட்டுக்காக  திருநீரைத் துறக்கும் சுண்ணாம்புகளை இனங்கண்டு ஒதுக்கித்தள்ளுங்கள். 

தர்காக்களில் வழங்கும் திருநீறும் புனிதமானதே. துஷ்ட ஆவிகளை தூர நிறுத்தும் ஆற்றலைக் கொண்டது.

*** *** ***








ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...