Monday, August 11, 2025

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை

 'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.'

ஆண்டவன்  படைத்தது மனிதன் என்றாலும் மதங்களைப்  படைக்கவில்லை.
மதங்களை படைத்தது  மனிதன் என்றாலும் மனிதத்தைப் படைக்கவில்லை.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

வானத்தில்   கருந்துளைகள் சவாலாகலாம்   அதை 
எண்ணத்தில்  வைத்திருந்தால்   அறிவாகுமா?

வானத்தில்   கருந்துளைகள் சவாலாகலாம்   அதை 
எண்ணத்தில்  வைத்திருந்தால்   அறிவாகுமா?

நதிவெள்ளம் கடல்  நோக்கிப்  பாய்ந்தோடுமே

நதிவெள்ளம் கடல்  நோக்கிப்  பாய்ந்தோடுமே  அதை   
விதியென்று ஊர்  சொல்லி வழி  மாற்றுமா? 

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன் 
இனம்காக்க  உறவாடி உயிர் போக்குமே 

மலர்தாவும் தேனீக்கள் தேன் சேர்க்குமே தன் 
இனம்காக்க  உறவாடி உயிர் போக்குமே

தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் 
தினம்உண்ணக் கிடைப்பது கூழாயினும் தன் 
மனம்மகிழ பகிர்ந்துண்டால் பசி தீருமே.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

மேகங்கள் வான்சென்று  மழை பெய்திடும்  
தேகத்தில்  உயிர்ப்பூ க்கள்  அமிழ்தாகிடும் 

மேகங்கள் வான்சென்று  மழை பெய்திடும்  
தேகத்தில்  உயிர்ப்பூ க்கள்  அமிழ்தாகிடும் 

காலம்தான் உனக்கென்று  காத்திருக்குமா
காலம்தான் உனக்கென்று  காத்திருக்குமா உடல் 
கோலம் தான் இழந்தபின் எழில் கூடுமா?

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்து நீ வாழ்ந்திருந்தால்  மண்ணுலகம் மதித்திடும்  - தெளிந்து 
நீ வழி நடந்தால்  பொன்னுலகம் பிறந்திடும்.

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..

புரிந்துகொள்.. புரிந்துகொள்.. புரிந்துகொள்..


No comments:

Post a Comment

மும்மலங்கள்

மும்மலங்கள் கோயிலைக்கட்டியவன் மனிதன்  சிலைதனை வடித்தவன் மனிதன்  உண்டியலை வைத்ததும் மனிதன்  பூட்டினைப்  போட்டதும்  மனிதன்  - சேருகின்ற காசுக்...