புலனறிவே யோகம்
திருமந்திரம் - 2023
ஆக மதத்தன ஐந்து களிறுஉள
ஆக மதத் தறியோடு அணைகின்றில
பாகனும் எய்த்து அவைதாமும் இளைத்தபின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.
ஐந்து மதம் கொண்ட யானைகள் இருக்கின்றன. அவைகள் அமைதியாக அதன் கட்டுத்தறியோடு இணைந்து இருப்பதில்லை. இதனால் யானைகளை பராமரிக்கும் பாகனும் ஓய்ந்துபோய், யானைகளும் சக்தி இழந்து இளைத்தபின் மீண்டும் பழைய வாழ்விற்கு திரும்ப முடியாது.
ஐம்புலன்களால் உண்டாகும் வேட்கையை அடக்க முடியாமல் தறிகெட்டு அலைவது உடல். முதுமையில் உடல் ஓய்ந்த நிலையில் புலன்களின் வேட்கை குறைந்து சுகமான யோக வாழ்வை தேடினாலும் அடைய முடியாது.
நம் உடலில் ஆற்றல் உள்ள போது, புலன்வழி போகாமல், யோக வாழ்விற்கு பயிற்சி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment