Thursday, September 5, 2019

நெஞ்சத்தில் பேரெழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேரெழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்


எழுத்துக்களுக்கு உயிர் உண்டா? உயிர் உண்டென்றால், அதனை ஏற்க உடல் உண்டா?

உடலும், உயிரும் கொண்டது தமிழ்.

ஐம்பத்தோர் அக்ஷரங்களில் உடலை வகைப்படுத்தி வைத்திருப்பதும் தமிழ்.

ஐந்தே எழுத்துக்களில் உயிர் பெற்று நிற்பதும் தமிழ்.

அ-இ-உ-எ-ஒ

அனந்த மொன்றேன் றறைந்திட ஆனந்தம்
ஆனந்தம் ஆ-ஈ-ஊ-ஓமென்று ஐந்திடம்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சும் அதுஆயிடும்
ஆனந்தம் அம்-ஹ்ரீம்-அம்-க்ஷம் ஆம் ஆகுமே.
                                                              -திருமந்திரம் 910


சிவமும், சக்தியும் ஒன்றிய நிலையில் ஆனந்த நிலையில் இருப்பதும் தமிழ்.

மொழி அறிவு பெற்ற அனைத்து உயிர்களின் சிரசில் நிற்பதும் தமிழ்.

a - e - i - o - u  என்று ஆங்கிலத்துக்கு உயிர் எழுத்து வழங்கியதும் தமிழ்.

கட்டோன்றி மட்டோன்றா காலத்தே வாளொடு
முட்டோன்றி மூத்த குடி.

                                                                                   -புறப்பொருள் வெண்பா மாலை

ஆதிபகவனுக்கு முன்னரே தோன்றிய தமிழினை போற்றி உயிரென வணங்குவோம். எப்படியென்றால், ஆதிபகவன் பேசியது தமிழ். ஏற்கனவே தமிழ் இருந்ததனால்தான் அவனால் தமிழ் பேச முடிந்தது.

பின்னை என்னே இப்பிறவி பெறுவது 
முன்னை நான்குமுயல் தவம் செய்கிலர் 
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் 
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே.
                                                                           - திருமந்திரம் 
 
நெஞ்சத்தில் தமிழ்  எழுதி
கண்ணுக்குள் நான் படித்தேன்.

*** ***














No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...