Friday, August 30, 2019

ஒண்ணுமொண்ணும் ரெண்டு உன்மேலாசையுண்டு

ஒண்ணுமொண்ணும் ரெண்டு
உன்மேலாசையுண்டு



கேள்வி: ஒண்ணும் ஒண்ணும் என்ன?

                   'ஒன் பிளஸ் ஒன்னு டூ மாமா' - கூட்டல்

                    'ஓரோண் ஒண்ணு' - பெருக்கல், வகுத்தல்

                   'ஒண்ணும் ஒண்ணும் பதினொண்ணு' - பார்த்தல்

                   'நீ பாதி நான் பாதி கண்ணே!' - பங்காளர்கள்

                  'ஒண்ணுமே தெரியல ஒலகத்திலே' - கழித்தல்

எது சரியான பதில் என்பது கேள்வியல்ல. பதில் சொல்லவே கேள்வி என்றெண்ணாமல், கேள்வி சரியானதா என்று கேட்கும் காலத்தில் நம் தலைமுறை.


வரையிடை நின்றிழி வான்நீர் அருவி
உரையில்லை உள்ளத் தகத்துநின் றூரும்
நுரையில்லை மாசில்லை நுண்ணிய தெண்ணீர்க்
கரையில்லை எந்தை கழுமணி யாறே.
                                                                       திருமந்திரம்-249


ஒண்ணு:  மலையிடை நின்றிருக்கும் வானீர்,  அருவியாக வழிகிறது என்றுரைக்க தேவை இல்லை.

இன்னொண்ணு: நம்முள்ளே [யோகத்தால், தலை உச்சியில்] ஊறுகின்ற
நுண்ணிய தெளிந்த நீரான வானீர், நுரையோ, அழுக்கோ இல்லாமல்,  நம் பாவங்களை கழுவுகிறது.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
                                                                            திருக்குறள்-20

ஒண்ணு: நீரின்றி அமையாது உலகம்.

இன்னொண்ணு: யாராயிருந்தாலும், தலையாகிய  வானத்தில் யோக நிலை இல்லாவிட்டால், வானீர்  ஒழுகாது.

'அதாண்ணே இது' - இனிமேல் யாரும் இன்னொண்ணு எங்கேன்னு கேக்காதீங்க. அப்படித்தான், மேற்சொன்ன குறளுக்கு, பொருள் எழுதி உள்ளார்கள்.

பின் குறிப்பு: யாரும் திருக்குறள் தேர்வில் இந்த பொருள் எழுதி, மதிப்பெண் கிடைக்கவில்லை என்று  குறை கூற வேண்டாம்.




No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...