உறைவிடம்
நான்
ஏதுமறியாதவன்
ஞானத்தங்கமே
பொருள்:
ஆற்றங்கரை என்றார்கள் தேடினேன், அகப்படவில்லை.
கோவில் கருவறையில் இருக்கலாமென்றார், அங்குமில்லை.
சிகரங்களில் அலைந்து பார்த்தேன், சிக்கவில்லை அங்கும்.
கண்மூடி மௌனித்தால், சிரசில் வந்து நின்றிடுமாம்.
மௌனத்தில், மூச்சுக்காற்றில், ஓம் என்ற பிரணவம் இருக்கட்டும்.
"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உருப்புச் சிவக்கும் உரோமங் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே"
-திருமந்திரம்
மௌனத்தில், 'நமக்ஷிவய' என்னும் பஞ்சாக்ஷரம், சஹஸ்ரஹாரத்திலிருந்து, மூலாதாரம் செல்லும் வழிமொழி இருக்கட்டும்.
"மூவெழுத்தும் ஈரெழுத்துமாகி நின்ற
மூலமதை யறிந்துரைப்போன் குருவுமாகும்
ஊவெழுத்துக் குள்ளே தானிருக்கு தப்பா
உணர்வதுவே கண்டறிந்தோ னவனே யாசான்"
-அகஸ்தியர்
இறைவனையும், உயிரையும் இணைத்து காட்டும் உணர்வுப்பாலம், மௌனம். பிரணவமும், பஞ்சாக்ஷரமும் கலந்த ஒலி அலைகள் காட்டிடுமாம் அந்த இறை நிலையை.
'ஓம் நமக்ஷிவய'
நான்
ஏதுமறியாதவன்
ஞானத்தங்கமே
பொருள்:
ஆற்றங்கரை என்றார்கள் தேடினேன், அகப்படவில்லை.
கோவில் கருவறையில் இருக்கலாமென்றார், அங்குமில்லை.
சிகரங்களில் அலைந்து பார்த்தேன், சிக்கவில்லை அங்கும்.
கண்மூடி மௌனித்தால், சிரசில் வந்து நின்றிடுமாம்.
மௌனத்தில், மூச்சுக்காற்றில், ஓம் என்ற பிரணவம் இருக்கட்டும்.
"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உருப்புச் சிவக்கும் உரோமங் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே"
-திருமந்திரம்
மௌனத்தில், 'நமக்ஷிவய' என்னும் பஞ்சாக்ஷரம், சஹஸ்ரஹாரத்திலிருந்து, மூலாதாரம் செல்லும் வழிமொழி இருக்கட்டும்.
"மூவெழுத்தும் ஈரெழுத்துமாகி நின்ற
மூலமதை யறிந்துரைப்போன் குருவுமாகும்
ஊவெழுத்துக் குள்ளே தானிருக்கு தப்பா
உணர்வதுவே கண்டறிந்தோ னவனே யாசான்"
-அகஸ்தியர்
இறைவனையும், உயிரையும் இணைத்து காட்டும் உணர்வுப்பாலம், மௌனம். பிரணவமும், பஞ்சாக்ஷரமும் கலந்த ஒலி அலைகள் காட்டிடுமாம் அந்த இறை நிலையை.
'ஓம் நமக்ஷிவய'
நிறை குடம்.. வேறென்ன சொல்ல!

No comments:
Post a Comment