Saturday, May 4, 2019

உறைவிடம்

உறைவிடம் 

நான்
ஏதுமறியாதவன்
ஞானத்தங்கமே

பொருள்:

ஆற்றங்கரை என்றார்கள் தேடினேன், அகப்படவில்லை.
கோவில் கருவறையில் இருக்கலாமென்றார், அங்குமில்லை.
சிகரங்களில் அலைந்து பார்த்தேன், சிக்கவில்லை அங்கும்.

கண்மூடி மௌனித்தால், சிரசில் வந்து நின்றிடுமாம்.

மௌனத்தில், மூச்சுக்காற்றில், ஓம் என்ற  பிரணவம் இருக்கட்டும்.

"புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட  வுள்ளே நின்மல மாக்கில்
உருப்புச் சிவக்கும் உரோமங் கருக்கும்
புறப்பட்டு போகான் புரி சடையோனே"
                                                                  -திருமந்திரம்

மௌனத்தில், 'நமக்ஷிவய'  என்னும் பஞ்சாக்ஷரம், சஹஸ்ரஹாரத்திலிருந்து, மூலாதாரம் செல்லும் வழிமொழி இருக்கட்டும்.

"மூவெழுத்தும் ஈரெழுத்துமாகி நின்ற
மூலமதை யறிந்துரைப்போன் குருவுமாகும்
ஊவெழுத்துக் குள்ளே தானிருக்கு தப்பா
உணர்வதுவே கண்டறிந்தோ னவனே  யாசான்"
                                                                      -அகஸ்தியர்

இறைவனையும், உயிரையும் இணைத்து காட்டும் உணர்வுப்பாலம், மௌனம். பிரணவமும், பஞ்சாக்ஷரமும் கலந்த ஒலி அலைகள் காட்டிடுமாம் அந்த இறை நிலையை.

'ஓம் நமக்ஷிவய'


  • Tamil Amav உண்மை ..! 
    மௌனமே ...!
    மனத்தின் மௌனமே ...!

    மந்திரங்கள் உரத்து ஒலிக்கையிலும் மௌனமே ....! 
    மனத்தில் மௌனமே ..!
    ஓயாமல் ஓதிய மந்திரத்தின் உதவியால் ஊதி அணைக்கப்பட்டது இரைச்சலோடு கொழுந்துவிட்டு கிளம்பிய எண்ணங்கள் ...
    உதட்டுவழி வெளிவந்த அல்லது வராத மந்திரத்தால் மன ஒலி ஒடுங்கியது ...
    மௌனம் தான்
    மனத்தின் மௌனம் தான்
    மோன நிலை 
    இறைநிலை 
    இன்ப நிலை 
    இறை மந்திரம் ஈந்த பேரின்பநிலை ... 
    மனோரூபி மனிதர்கள் 
    மந்திரரூபியாக மலர்கையில் 
    மண்ணகம் இறைமகத்துவமடைகிறது ..!
    ஓம் நமச்சிவாய ..!

நிறை குடம்.. வேறென்ன சொல்ல!

  

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...