Friday, May 10, 2019

நானே நானா?

அடி நானே நானா?

நானே நானா?
என்னை நானே
மறந்தேனா?

பொருள்: 

'நெற்றிக்கண் திறப்பினும்  குற்றம் குற்றமே' - என்ற நக்கீரனின் குரல் அல்ல, நக்கீரியின் குரல் என்னை திருமந்திரத்தை மீண்டும் படிக்க வைத்தது.

'அப்பாழுக்கப்பாழ்'- இது சரியான தமிழ் வார்த்தையல்ல என்பது  வாதம்.

'நான் நானில்லை'- என்ற அற்புதமான மின் புத்தகத்தை படித்து விட்டு, எழுதிய என் கருத்தில் இயல்பாக வந்த வார்த்தை.

அகம், புறம் எப்படி மனித வாழ்வில் உள்ளதோ அதற்கு சமமான நிலையில் அடி, முடி என்பது இறை நிலையில் இருப்பதாக அறிகிறோம்.

அகம், அதாவது அடி  என்று எடுத்துக்கொண்டால், மூன்று வகையான பாழ் நிலை உள்ளது.

அப்பாழ், மாயை பாழ், உயிர் பாழ் மற்றும் அமைதி பாழ் என மூன்று வகையாக உள்ளது. நான் என்பதை அறிய முதலில் இந்த முப்பாழை கடக்க வேண்டும்.


மாயப்பாழ் சீவன் வியோமோப்பாழ் மன்பரன்
சேயமுப்பாழ் எனச் சிவசக்தியில்  சீவன்
ஆயவியாப்தம் எனும் முப்பாழாம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே.
                                                                      -திருமந்திரம்

புறம், அதாவது முடி என்று எடுத்துக்கொண்டால், பரந்த வெளி மட்டுமே. அது நம் சிரசில் ஆரம்பித்து எல்லை இல்லாமல் பரவெளி தாண்டி, பாழ் வெளி நீண்டு சென்று கொண்டே உள்ளது.

அப்பாழ், அரிதினும் அரிதானது. பெரிதினும் பெரிதான பரம்பொருள்.

துரியம் அடங்கிய சொல்அறும் பாழை
அரிய பரம்பரம் என்பார்கள் ஆதர்
அரிய பரம்பரம்  என்றே துதிக்கும்
அருநிலம்  என்பதை யார் அறிவாரே.
                                                      -திருமந்திரம்

இதைத்தான் என்னை சொல்ல வைத்திருக்கிறது, 'அப்பாழுக்காப்பாழ்' என்று.

என்னுள் இருக்கும் 'நான் நானில்லை'; எல்லாமே நான்.
அணுவும் நான், பேரண்டமும் நான்.

மிக்க நன்றி அம்மா!

மனம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துக்கள்!





No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...