Tuesday, April 16, 2019

புலனறிவு

புலனறிவு 

ஆடிய ஆட்டமென்ன
பேசிய வார்த்தையென்ன
புலனறிவை வென்றுவிட்டால்
உயிரறிய தடையுமென்ன

பொருள்:

உணர் மனம் புலன்கள் தரும் உணர்வுகளை, புலனறிவு செய்திகளாக்கி, அடி மனதில் சேமிக்கின்றது. நாளடைவில் அதுவே 'நான்' என்ற அடையாளத்தோடு  வாழ்க்கையை அனுபவிக்கிறது. ஆழ் மனம் இதை அறிந்தாலும் அக்கறை கொள்வதில்லை.

இந்த புலனறிவு என்ற மாயையை விலக்கி பார்க்கும் தெளிவை  நாம் அடைந்து விட்டால், நம் ஆழ் மனதின் ஜீவ ஒளி, நம்முடைய பிறவியின்  கடமையை அறிய செய்து விடும்.

பிறவிக்கடனை செய்து முடிப்போம்..

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
                                                  - திருக்குறள் 

அப்புறமென்ன..  நீந்திர வேண்டியதுதான்.

நம்மை இந்த உலகிற்கு என்ன காரணத்திற்காக இறைவன் படைத்திருக்கிறானோ, அந்த காரணமே கடமையாகிறது. அதுவே பிறவிக்கடன் என்று அறியப்படுகிறது.

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...