Wednesday, April 17, 2019

17 ஏப்ரல் 2019

17 ஏப்ரல் 2019

ஒப்புவமையற்றோன் தாள் சேர்ந்து
ஒப்புவமையேற்றாய் அம்மா!

விளக்கம்:

பிறந்த நொடியில், தாய் மடி தேடிடும் உயிர்கள் இறைமையின் உந்துதலால்.
இறை இல்லையென்று மறுப்போரும், மறுக்க முடியுமா இந்த உயிரின் தேடுதலை.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
                                                                             -திருக்குறள் 

சக்தியை அம்மாவாக்கி, பெண்மைக்கே பெரும்பொருள் தந்தான் அந்த பரம்பொருள்.

அம்மாவின் மறைவு ஓராண்டு நிறைவு நினைவாக..

தனது முப்பத்து மூன்றாவது வயதில், ஏழு பிள்ளைகளுக்கு தாயாகி, கைப்பிடித்தவன் விலகி தனி மரமாகி, எந்த பொருளாதார பின்புலமில்லாமல் இறை ஏங்கி.. வாழ்ந்து எங்களை காத்து வளர்த்தவள்  எங்கள் அம்மா. 

இன்று, உன் குழந்தைகள் உலகம் முழுக்க பயணிக்கிறார்கள் அன்று நீ பசித்து, எங்களுக்கு  தந்த நீராகாரத்தால். 

கண்ணீரால் உன்னை ஆராதிக்கிறேன் அம்மா..

எப்பிறப்பும் உன் மடியில் 
தப்பாமல் நான் பிறக்க 
அருள் புரிவாய்  அம்மா!

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...