Tuesday, April 2, 2019

பூ மலரட்டும்

பூ மலரட்டும் 

தொட்டால் 
பூ 
மலரும் 

பொருள்:

நாம் சுவாசிக்கும், சுவாசக்காற்று முதலில் உடலின் வெப்பத்திற்கு சமனப்படுகிறது. மின்னல் வேகத்தில், காற்று வந்த செய்தி மூளைக்கு செய்தியாகிறது. ஒளி ஆற்றல் பெற்ற செய்தி ஆறாதாரங்களின் வழியாக ஜீவசக்திக்கு சென்றடைவதே 'உணர்வு'.

சுவாசம் (காற்று) --> வெப்பம் --> ஒளி --> மூளை --> ஆறாதாரம் --> உணர்வு 

அனைத்தும் சமகாலத்தில் அனிச்சையாக நடந்துகொண்டே உள்ளது, உடலில் உயிர் உள்ளவரை.

காற்று        தொட்டால் 
உணர்வு     பூ 
ஜீவனில்     மலரும் 

அறியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம் 
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம் 
                                                                                           -சிவ வாக்கியர் 

உணர்வாகின்ற ஞாபகம் எவ்விடமிருந்து உண்டாகிறதென்றால் பிரகாசத்திலிருந்தேதான். பிரகாசம் அக்கினியிலிருந்துண்டாகிறது. அக்கினி உண்டாகிறது வாயுவிலிருந்து. அப்பொழுது வாயுவாகி, அக்கினியாகி, பிரகாசமாகி, அறிவாயிருக்கின்ற ஜீவசக்தி தன்னிலே அடங்கும்பொழுதுதான் நமக்கு உணர்வு உண்டாகிறது.
                                                                                                   -சித்த வேதம் 

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...