இரசவாதம்
இறை நிலை
விவாதம்
இரசவாதம்
இரசவாதம் செய்யும் ஆற்றல் இருந்தால் செம்பை பொன்னாக்கலாம்; இறவா நிலை பெறலாம் என்ற ஆராய்ச்சி நீண்ட காலம் இருந்திருக்கிறது. சித்தர்களுக்கு இரசவாதம் சாத்தியமே என்று படித்திருக்கிறோம்.
திருமந்திரம்-2054
பரிசன வேதி பரிசித்தது எல்லாம்
வரிசைதரும் பொன் வகை ஆகுமா போல்
குரு பரிசித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.
இரசவாதம் தொட்டதெல்லாம் போன். குரு தொட்டவரெல்லாம், ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் நீங்கி சிவனடி சேர்வார்கள்.
அணுப்பிளவு, அணுத்தரிப்பு நிகழ்வுகளில் ஒரு தனிமம் வேறு வேறு தனிமங்களாக மாறுவதை அறிந்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, யுரேனியம்-235 தனிமம் அணுப்பிளவின் போது பேரியம்-141 மற்றும் க்ரிப்டன்-92 தனிமங்களாக மாறுகிறது. ஆயினும் செம்பை பொன்னாக்கும் கலை அறிவியலில் இன்னும் அறியப்படவில்லை.
தனிமத்தின் உட்பொருளாம், பேராற்றலின் கருவே இறை நிலை. இந்த பரம அணுவும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
அணுப்பிளவு, அணுத்தரிப்பு நிகழ்வுகளில் ஒரு தனிமம் வேறு வேறு தனிமங்களாக மாறுவதை அறிந்திருக்கிறோம். எடுத்துக்காட்டாக, யுரேனியம்-235 தனிமம் அணுப்பிளவின் போது பேரியம்-141 மற்றும் க்ரிப்டன்-92 தனிமங்களாக மாறுகிறது. ஆயினும் செம்பை பொன்னாக்கும் கலை அறிவியலில் இன்னும் அறியப்படவில்லை.
தனிமத்தின் உட்பொருளாம், பேராற்றலின் கருவே இறை நிலை. இந்த பரம அணுவும் இன்னும் முழுமையாக அறியப்படவில்லை.
*** *** ***
No comments:
Post a Comment