Saturday, March 9, 2019

தெளிவு

தெளிவு  

பேரின்பம்
ஒளிரும் 'குரு'
அரவணைத்தால்


பொருள்: 
அறிவு நிலை மிஞ்சிய நடப்புகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. நல்ல உறுதுணை இருந்தால் மட்டுமே 'அவன்' உறையும்  பாதை அறிந்து கொண்டு பேரின்ப நிலை அடையலாம். குரு ஒருவரே நம்மை வழி நடத்த வல்லவர்.

திருமந்திரம்-139

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.
    
                                                  

நம் அறிவு நிலையில் தெளிவு பிறக்க வேண்டுமானால் முதலில் நமக்கு வீடு பேரடைய  நல் வழி காட்டக்கூடிய குரு தேவை.

நல்லதொரு குரு கிடைத்த பின்னர், அவருடைய திருமேனியை தினம் தோறும் தரிசிக்க வேண்டும். அவருடைய பெயரை மந்திரமாய் உச்சரிக்க வேண்டும். அவருடைய அருளுரைகளை கேட்க வேண்டும். எப்பொழுதும் அவருடைய திரு உருவத்தை சிந்தித்திருத்தல் வேண்டும்.

*** *** ***

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...