Thursday, March 14, 2019

ஒன்று

ஒன்று 

ஒன்றினின்று
ஒன்றைக்கழித்தபின்
ஒன்றொன்றொன்றுமில்லை

பொருள்: 

உடல் என்ற ஒன்றிலிருந்து இருந்து வாயு வெளியேறி விட்டால்,
உடலும், வாயுவும் வெவ்வேறாகி, நிலை மாறி
ஒன்றுமில்லா  நிலைக்கு சென்றுவிடும்.


ஒன்றி நின்று
ஒன்றைக்கூடினில்
ஒன்றொன்றினெல்லை

உடல் வாயுவுடன் ஒன்றி நின்று, சமமான நிலையில்
இருந்தால், அதுவே உடல் ஆரோக்கிய வாழ்வின்
எல்லையாக அமையும்.


இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.
திருமந்திரம் 

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...