காசேதான் கடவுளப்பா
வரவுக்குமேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும்
மனிதனுக்கு வாழ்க்கை ஏன் போராட்டமாகவே அமைந்துவிட்டது?
வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?
பணம். பணம்தான் எதையும் தீர்மானிக்கிறது.
வேலைக்கு சென்றால் கிடைக்கும் வருமானம் ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. பற்றாக்குறை என்பது பரமபத விளையாட்டாகிவிட்டது.
சம்பளம் வாங்கி பரமபத ஏணியில் ஏறினால், அடுத்த கட்டமே சீறும் பாம்பின் வாயில் சிக்கி ஏறிய இடத்திலிருந்து பின்னோக்கி நகர வேண்டியதாக இருக்கிறது.
ஏதாவது, ஒரு தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்றால், போட்ட முதலை எடுப்பதே பெரும்பாடாகிவிடுகிறது.
ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகேட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
- நல்வழி 25
போட்ட முதல் போய்விட்டால், மீண்டும் தொழில் செய்யும் ஆர்வமும் கருகிவிடும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இந்த நியதி உடலுக்கும் பொருந்தும்.
உடலின் முதல் உயிர் சத்து. அதிகம் செலவழித்தால் எல்லாம் போச்சு. முதலில் ஆரோக்கியம் போகும். இரண்டாவது வாழ்வில் பிடிப்பு நீங்கி வெறுப்பு உண்டாகும்.
காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன்
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன்
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை
காலின் கண் வந்த கலப்பறியாரே.
- திருமந்திரம் 1954
விந்துவின் சக்தியை வெல்ல முடியாமல் போனால், அழிவு நிச்சயம். வெல்ல முடிந்தால் காலத்தையும் வெல்லலாம். சில சமயங்களில் விந்து வென்று பெண்ணுடல் கலக்கும் காலத்தில், அவளிடம் இருந்து உயிருடன் கலக்கும் வாயுவை அறியமாட்டார்கள், என்கிறார் திருமூலர்.
நாம் பல இடங்களில் படித்தும், கேட்டும் இருக்கிறோம். அரசர்கள் இளம் பெண்களை அந்தப்புரத்தில் வைத்து, அவர்கள் வழியாக தாங்கள் இழந்த உயிர் சக்தியை மீண்டும் பெற பல வகை யோகங்கள் செய்திருக்கிறார்கள் என்று. பின்னர் அவர்களுடன் கூடி மேலும் மேலும் உயிர் சக்தியை இழந்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment