Wednesday, January 4, 2023

காசேதான் கடவுளப்பா

காசேதான் கடவுளப்பா 


வரவுக்குமேலே செலவுகள் செய்தால்
அவனும் குருடனும் ஒன்றாகும் 


மனிதனுக்கு வாழ்க்கை ஏன் போராட்டமாகவே அமைந்துவிட்டது?

வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் எதனால் தீர்மானிக்கப்படுகிறது?

பணம். பணம்தான்  எதையும் தீர்மானிக்கிறது.

வேலைக்கு சென்றால் கிடைக்கும் வருமானம் ஒரு எல்லைக்குள் நின்று விடுகிறது. பற்றாக்குறை என்பது பரமபத விளையாட்டாகிவிட்டது.

சம்பளம் வாங்கி பரமபத ஏணியில் ஏறினால், அடுத்த கட்டமே சீறும் பாம்பின் வாயில் சிக்கி ஏறிய இடத்திலிருந்து பின்னோக்கி நகர வேண்டியதாக இருக்கிறது.

ஏதாவது, ஒரு தொழில் செய்து வருமானம் ஈட்டலாம் என்றால், போட்ட முதலை எடுப்பதே பெரும்பாடாகிவிடுகிறது. 

ஆன முதலில் அதிகம் செலவானால் 
மானம் அழிந்து மதிகேட்டுப் - போனதிசை 
எல்லார்க்கும்  கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் 
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
                                                                       - நல்வழி 25

போட்ட முதல் போய்விட்டால், மீண்டும் தொழில் செய்யும் ஆர்வமும் கருகிவிடும். மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இந்த நியதி உடலுக்கும் பொருந்தும்.

உடலின் முதல் உயிர் சத்து. அதிகம் செலவழித்தால் எல்லாம் போச்சு. முதலில் ஆரோக்கியம் போகும். இரண்டாவது வாழ்வில் பிடிப்பு நீங்கி வெறுப்பு உண்டாகும்.

காலம் கடந்தவன் காண் விந்து செற்றவன் 
காலம் கடந்தழிந்தான் விந்து செற்றவன் 
காலங்களில் விந்து செற்றுற்ற காரிகை 
காலின் கண் வந்த கலப்பறியாரே.
                                                                - திருமந்திரம் 1954 

விந்துவின் சக்தியை வெல்ல முடியாமல் போனால், அழிவு நிச்சயம். வெல்ல முடிந்தால் காலத்தையும் வெல்லலாம். சில சமயங்களில் விந்து வென்று பெண்ணுடல் கலக்கும் காலத்தில், அவளிடம் இருந்து உயிருடன் கலக்கும் வாயுவை அறியமாட்டார்கள், என்கிறார் திருமூலர்.

நாம் பல இடங்களில் படித்தும், கேட்டும் இருக்கிறோம்.   அரசர்கள் இளம் பெண்களை அந்தப்புரத்தில் வைத்து, அவர்கள் வழியாக தாங்கள் இழந்த உயிர் சக்தியை மீண்டும் பெற பல வகை யோகங்கள் செய்திருக்கிறார்கள் என்று. பின்னர் அவர்களுடன் கூடி மேலும் மேலும் உயிர் சக்தியை இழந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருமுறை உறவின்போதும், பெண்ணின் சுரோணிதத்தில் உருவாகும்  வாயுவானது ஆணின் தனஞ்சய வாயுவுடன் சேர்கிறது. இளம்பெண்களின் வாயு வலிமையையும், பேரிளம் பெண்களின் வாயு இன்பத்தையும், முதிர் பெண்களின் வாயு நோயையும் ஆண்களுக்கு தர வல்லது.  

சரி, விந்து எப்படி வெற்றி கொள்கிறது என்று பார்ப்போம்.

மனித உடலின் இயக்கம் முப்பத்தியாறு தத்துவங்களின் அடிப்படையில் இயங்குகிறது. அதில் சுத்த தத்துவம் எனப்படும்  சிவ தத்துவம் ஐந்தைப்பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

விந்து சக்தி, நாத சக்தி.

இதில் நாத சக்தி, ஞான சக்தியாக சிவமாக விளங்குகிறது. விந்து சக்தி பராசக்தியாக, கிரியா சக்தியாக செயல்படுகிறது.

மூன்றாவதான இச்சா சக்தி மூன்று நிலைத்தன்மை பெறுகிறது.

ஒன்று, ஞான சக்தி மிகுந்து, கிரியா சக்தி குறைந்த சுத்த வித்தை.
இரண்டாவது, ஞான சக்தி குறைந்து, கிரியா சக்தி மிகுந்த ஈசுவரம்.
மூன்றாவது, இரண்டு சக்திகளும் சமமாக இயங்கும் சதாசிவம். 

சுத்த வித்தை அறிந்தவன் ஞானி. ஈசுவரம் மிகுந்தவன் போகி. சதாசிவம் கற்றவன் யோகி.

நாமெல்லாம் ஈசுவர நிலையிலிருந்து, அதாவது போக வாழ்விலிருந்து, யோக வாழ்விற்கும், ஞான வாழ்விற்கும் செல்ல முயன்று கொண்டிருக்கிறோம்.

முயற்சி வெற்றி அடைய  என்ன செய்யலாம்?

பார்க்கின்ற மாதரை பாராது அகன்றுபோய்  
ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல்மூட்டிப்  
பார்க்கின்ற கண்ணாசை பாழ்பட மூலத்தே 
சேர்க்கின்ற யோகி சிவ யோகிதானே.
                                                                - திருமந்திரம் 1937


நீ பார்க்கின்ற அல்லது உன்னைப் பார்க்கின்ற பெண்ணை பாராமல் செல்ல வேண்டும். பெண்ணை பார்த்ததால் உள்ளத்தில் ஏற்பட்ட ஆசை என்னும் கிரியா சக்தியை நெற்றி நடுவில் வைத்து சேர்த்து எரித்து விடவேண்டும்.

எப்படி எரிப்பது என்ற கேள்வி வருகிறதல்லவா?

எளிமையாக சொல்கிறேன். பிராணாயாமம் செய்யுங்கள் போதும். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார்.

உங்களுக்கு ஏற்பட்ட ஆசை உணர்வை விழிப்புணர்வோடு மூலாதாரத்திற்கு கொண்டு செல்லுங்கள். 

மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

சூரிய நாடியில், வலது நாசி வழியாக  செல்லும் காற்று, கண்ணாசையை எரித்து, நெற்றி நடுவிற்கு எடுத்து சென்று விடும். இதை செய்வது நாடு நாடியில் நின்றியங்கும் தனஞ்செய வாயு.


*** *** ***








 


No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...