கன்னித்தாய்
உன்னையும் உன்னையும்
என் ரெண்டு குழந்தை போலவே
எப்போதும் எப்போதும்
நான் பத்துப்பேனே!
'சூரிய தேவா, நான் சிறு பெண். ஆர்வத்தால் மந்திரத்தை பிரயோகித்துப் பார்த்தேன். உங்களுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதும் இல்லை. இது முறையும் அல்ல.' - இளம் பெண்ணான குந்தி தன்னை அடைய தன் முன்னர் நிற்கும் சூரிய பகவானை கையெடுத்து கும்பிட்டுக் கதறினாள்.
துர்வாச முனிவருக்கு மனம் மகிழும்படி செய்த பணிவிடைகளினால் 'குழந்தை பெரும் மந்திரத்தை' வரமாக பெற்றாள் குந்தி. கிடைத்த வரத்தை விளையாட்டாக சூரியனைப் பார்த்து பிரயோகிக்க குழந்தை வரம் கொடுக்க நேரில் வந்து நின்று குந்தியை ஆகர்ஷிக்கப் பார்க்கிறான்.
'குந்தி தேவியே, என்னை மந்திரத்தால் அழைத்திருக்கிறாய். கண்டிப்பாக மந்திரத்தின் பலனாக உனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தாக வேண்டும். ஒன்று மட்டும் என்னால் செய்ய முடியும். மீண்டும் உன்னை கன்னிப்பெண்ணாக மாற்றி விட முடியும்.' - இப்படியாக பலதும் கூறி குந்தியை சேர்கிறான் சூரியன்.
பலன், பராக்கிரமசாலியான கர்ணன் பிறக்கிறான்.
குந்தி மீண்டும் கன்னியாகிறாள்.
பகுத்தறிவிற்கு ஒவ்வாத காரியம் இது. குழந்தை பெற்ற பெண் மீண்டும் கன்னித்தன்மை பெறுவது சாத்தியமா?
பெண்ணின் கருமுட்டையை வெளியே எடுத்து, கருத்தரித்தல் செய்து மீண்டும் பெண்ணின் வயிற்றில் வளர செய்யும் கலையை இன்றைய அறிவியல் உலகம் செய்து காட்டி விட்டது.
கருத்தரித்து உயிர் உண்டான நிலையில் மற்றோர் பெண்ணின் வயிற்றில் கருவை வைத்து, வளர்த்து குழந்தை பெற்று கொள்வது இன்றைய மருத்துவ உலகில் பிரசித்தமாக உள்ளது.
குழந்தை பெற்றும் தாயின் கன்னித்தன்மைக்கு எந்த பங்கமும் நேரவில்லை.
இது நடைமுறைக்கு சாத்தியமே என்று பின்னர் வரும் சந்ததியினர் அறிந்துகொள்ள குந்தியின் கதை எழுதப்பட்டதோ?
கருத்தரித்த மாத்திரத்தில், கருவில் சேர்ந்த உயிரின் வாழும் நாள், சாகும் நாள், அனுபவிக்கும் உலக இன்ப துன்பம் எல்லாம் தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. இவ்வாறாக உருப்பெறும் கருவானது, உருவான பெண்ணை நீங்கி வேறிடத்தில் வளர்ந்தாலும், உரிய நேரத்தில் அதாவது பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும்.
பார்த்திட்டு வையத்துப் பரப்பற்று உருப்பெற்று
வார்ச்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்ந்துஉற்று இருதிங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின் நாளில் ஆமெல்லாம் உள்ளவே.
- திருமந்திரம் 1945
*** *** ***
No comments:
Post a Comment