Friday, April 5, 2019

பற்று

பற்று 

பற்றியிருப்போரும்
பற்றற்றிருப்போரும்
பற்றியொளிர்வது
பரஞ்சோதியில்

பொருள்:
இறைநிலை தேடி அதில்தான் வாழ்வேன் என்று, காடு, மலைகள் சுற்றி, குகைகளில் பற்று வைத்து வாழ்வோரும், இறைநிலை பற்றிய உணர்வும் பற்றும்  இல்லாமல் இல்லற வாழ்வில் நிலைத்திருப்போரும்  அந்த ஆனந்த ஜோதியில் இருந்து வந்து  ஒளிர்பவர்கள்தான்.

உலக வாழ்வே பெரிதென, பொருள் தேடி இல்லற வாழ்வில் பற்றி இருப்போரும், உலகே மாயமென பற்றற்று இல்லற வாழ்வை  துறந்தோரும் அந்த பரமானந்த ஜோதியில் இருந்து வந்து ஒளிர்பவர்கள்தான்.

பஞ்சபூதங்களையும் அணுவினில் அடக்கி, அணுவினுக்கு அதிபதியாய் விளங்கும் அந்த பரஞ்சோதிதான் நம் உயிரணு என்ற உணர்வில் ஒளிர்வோம்.






No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...