Sunday, March 24, 2019

ஆனந்தம்

ஆனந்தம் 

எல்லையற்ற 
ஆனந்தம் 
எல்லைகளற்றது 

பொருள்:
பரம்பொருளுடன் ஆனந்த நிலையில் இருந்த உயிர், மண்ணில் பிறக்கும்பொழுது ஆனந்தத்தையே  எல்லைக்கோடாக கொண்டிருக்கிறது.
ஆனால், குழந்தை நிலையில் இருக்கும் ஆனந்தம், வளர வளர அகம்-புறம் என்னும் தாக்கத்தினால் ஆனந்தம் என்ற நிலையையே மறந்து போகிறது.

ஆணவம், கன்மம், மாயை அக எல்லையாகவும், கடமை, சமுதாயம், ஒழுக்கம் புற எல்லையாகவும் அமைந்து உயிரின் ஆனந்த நிலையை மறைத்து விடுகிறது.

ஞானிகளாக தங்களை அடையாளப்படுத்துபவர்கள், தங்கள் பெயரில் மட்டுமே, ஆனந்தத்தை வைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

கானல்நீர் கனவுகள்

கானல்நீர் கனவுகள்   நீங்கள் கனவு காண்பவர்களா? கனவில் இரண்டு வகை உண்டு தெரியுமா? ஒன்று, சகலரும் அனுபவிக்கும் கனவு. மற்றொன்று தியானத்தில் வருக...