Friday, May 8, 2020

ஆதி பராசக்தி

ஆதி பராசக்தி


டவுனுப்பக்கம் போகாதீங்க
மாப்பிளே
டவுனாயிப்போயிருவீங்க





சென்னைப்பக்கம் போகாதீங்க
மக்களே
செல்லரிச்சுப் போயிருவீங்க

'ஊசி மூஞ்சி மூடா, எனக்கே புத்தி சொல்கிறாயா. உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னுடைய கூட்டை   பிய்த்து எறிகிறேன்' - மழைக்கு ஒதுங்க ஒரு வீடு கட்டலாம் அல்லவா  என்று கேட்ட குருவியின் கூட்டை கலைக்க வேகமாக பனை மரத்தில்  ஏறியது குரங்கு.

இயற்கை எரிபொருளா? தூக்கிவை  உள்ளே அவனை. உலகமே எதற்காக  ஒருமித்த குரலில் இணைந்து கொரோனாவை வளர்க்கிறது என்று பொருள் சொன்னவனை உள்ளே போடு. நம் பாரம்பரிய மருந்தே போதும் என்று சொன்னால், சும்மா விடக்கூடாது  அவனை. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று விளக்கி சொல்ல பொறுமை இல்லை அரசிடம்.

மாற்று கருத்து சொன்னாலே போதும், என்கவுண்டர் நிச்சயம் என்றாகிவிட்டது. மக்கள் சிந்திக்கவே கூடாது. காரண காரியங்களோடு சிந்தித்து சொல்லும் புத்திமதியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இல்லை, எல்லாம் குரங்கு புத்தி. மதுப்பிரியர்களின் பணமும், வாக்குகளும்  தேவை.

நம் உடலும் அரசு மாதிரிதான்; உள்ளே உயிர் இருப்பதையோ, சக்தியாக நின்று உடலை இயக்கும் பேராற்றலையோ உணர்வதே இல்லை.  தொடர்ந்து நம் உடலில் இருந்து தரும் அறிவுரைகளை அறியவொண்ணா மூடர்களாக இருக்கிறோம்.

அவளை          அறியா    அமரரும்       இல்லை
அவளன்றிச்  செய்யும்  அருந்தவம்  இல்லை
அவளன்றி     ஐவரால்    ஆவதொன் றில்லை
அவளன்றி     ஊர்புகு     மாறு             அறியேனே.
                                                                                - திருமந்திரம் 1053

ஆதிசக்தியே   உடலில் நின்று ஆட்சி செய்வதை   உணர்ந்தவர்கள் தேவர்கள் ஆனார்கள். அந்த உணர்வினை அடையவும்,  ஐம்புலன்களின் உறுதுணையால் தவம் செய்யவும், இறையடி சேரவும் முடியும்.

No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...