Sunday, August 2, 2020

அனுபவம் புதுமை

அனுபவம் புதுமை 





பனிபோல் குளிர்ந்தது 
கனிபோல் இனித்ததம்மா
ஆஹா மழைபோல் விழுந்தது 
மலராய் மலர்ந்ததம்மா   


காணொளி:


'பல பிறவிகளில் உங்கள் ஆன்மா சேமித்த கர்ம வினைகளும், இப்பிறவியில் நீங்கள் கொண்ட அனுபவமும் உங்கள் பார்வையில் மாயையாய் படிந்திருக்கிறது' - என்றான் கண்ணன், தன்  முன்னே 'நல்லவன்  ஒருவனையும் காண முடியவில்லை' என்ற துரியோதனனையும், 'தீயவர் ஒருவரையும் காணவில்லை' என்று  வணங்கி நின்ற தர்மரையும் பார்த்து. 

விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீர்விடத்து நிற்குமாம் தீது.
                                                                                                           - நாலடியார் 

தவம் செய்யும் ஒருவனிடம் எவ்வித பாவமும் நில்லாது, ஒளி பாய்ந்த இருட்டறையில் இருள் மறைவதைப்போன்று, என்று தவத்தில் பெருமையை விளக்குகிறது இப்பாடல்.

'ஆமா, காய்கறிகள், தேங்காய் எல்லாம் சாப்பிட்றத மட்டும்தான் சமைக்க முடியும். மிச்சம் குப்பைதான். வேணுன்னா நீங்களும், உங்க வீட்டாட்களும் அப்படியே தின்னுங்க' என்று பொரிந்தாள்  குமுதா,'சாப்பிட்றதுக்கு  தினமும்  வாங்கும் பொருளின் அளவுக்கு சமமா குப்பையா போடுறோம்' - என்ற கணவனைப்  பார்த்து.

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க - யாக்கை
மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.
                                                                                                           - நாலடியார்

உடலில் உள்ள உயிரானது, மலையிடை தோன்றும் மேகத்தைப்போல் மறைந்து விடும். உடல் பெற்றதால் ஆய பயனான தவத்தை மேற்கொண்டு, தன்  பாவங்களை களைந்து பிறவிப்பயன் பெறுதல் வேண்டும்.

'நல்லா கேட்டுக்குங்க. கொஞ்ச கொஞ்சமா தன்னையே முறையா சிதைச்சிகிட்டாதான், [பட்டை தீட்டிய] வைரமே  ஜொலிக்க முடியும்.'

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண்டுஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி 
அருமையும் பாரா ரவமதிப்புங்  கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார்.
                                                                                          - நீதிநெறிவிளக்கம் 

தவம் மேற்கொள்வார்க்கும் இது சரியாக பொருந்தும். தன்  உடலையே ஆதாரமாக கொண்டு இயற்றக்கூடிய தவத்தின் சிறப்பை திருமூலர் சொல்வதைக்கேட்போம்.

கோணா மனத்தைக்  குறிக்கொண்டு கீழ்க்கட்டி 
வீணாத் தண்டூடே வெளிஉறத் தான்நோக்கிக் 
காணாக்கண் கேளாச் செவிஎன்று இருப்பார்க்கு 
வாழ்நாள் அடைக்கும் வழிஅது வாமே.
                                                                                                   - திருமந்திரம் 588

உறுதியான மனநிலையில், தியானத்தில் லயித்து, கண்களும், காதுகளும் செயல் மறந்து, உள்ளொளியில்  உறைவோர்க்கு வாழ்நாள் அழியாமல் நிலைக்கும்.





 








No comments:

Post a Comment

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம்     எனக்கு தீப ஆராதனை.  இவ்வளவு நேரம் என் மேனியெல்லாம் அபிஷேகம். பால், தேன், பஞ்சாமிர்தம் என வெவ்வேறு உணவு, வாசனை திரவியங்...