Wednesday, November 6, 2019

அறிவிலார்

இது பொறுப்பதில்லை தம்பி
எரிதழல் கொண்டு வா



ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

அதிகாரம்:  நீத்தார் பெருமை          குறள் எண்: 25


மு.வ உரை:
ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.
சாலமன் பாப்பையா உரை:
அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின் வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.
கலைஞர் உரை:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

என்னுரை:
ஐந்து புலன்களின் இச்சைகளை கட்டுக்குள் வைத்திருப்பவனின் ஆற்றல் எத்தகையது என்றால், அகன்ற வானத்தில் வாழும் தேவர்களின் அரசனான இந்திரனது வாகனமான யானை ஐராவதத்தின் ஆற்றலுக்கு ஒப்பானது ஆகும்.

இந்திரன்-அகலிகை:
அழகில் மிக உயர்ந்தவளாக இருக்கின்ற அகலிகை மேல் இந்திரனுக்கு ஆசை உண்டாகிறது. அவள் ஆற்றங்கரையில் இருக்கும் சமயம் தன்னுடைய விருப்பத்தினை வெளியிட்டு அகலிகையின் கோபத்திற்கு ஆளாகிறான். தன் கணவன், கௌதம முனிவரை  தவிர  பிறரை நினையாமல் வாழும் கற்புக்கரசியாக அகலிகை இருந்ததால், ஒருநாள் கௌதமர் ஆற்றங்கரைக்கு செல்லும் நேரம், கௌதமராக உருமாறி அகலிகையை அடைகிறான்.

இந்திரனா ஐந்தவித்தான்?

அஞ்சும் அடக்கு  அடக்கு என்பர் அறிவிலார் 
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை 
அஞ்சும் அடக்கில் அசேதனமாம் என்றிட்டு 
அஞ்சும் அடக்க அறிவு அறிந்தேனே.
                                                     -திருமந்திரம் 2033

வானத்து தேவர்களாலும் அடக்க முடியாத, ஐம்புலனிச்சையை அடக்கு, அடக்கு என்று சொல்வது அறியாமையே ஆகும்.

சாணியும்  வண்ணமும்   நீருண்ணும், உண்ணா  
எழுத்தாணி கொண்ட வண்ணம். 








No comments:

Post a Comment

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...