Saturday, May 9, 2020

காதல் செய்வீர்

காதல் செய்வீர்


கண்ணிலே மின்னும் காதலே 
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே







'இவ்வளவு கேவலமானவனா இருப்பேன்னு எனக்கு தெரியாமப்போயிருச்சு. இனிமே என்னப்பாக்க இந்தப்பக்கம் வராதே' - என்று தன்னுடைய தோழி அவனைப்பார்த்து புன்னகைத்ததற்காக ஊடிக்கொண்டே,  இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உட்கார்ந்தாள் காவ்யா.

பெண்களின் வார்த்தைகளின்   அர்த்தமும்  வேறுதான்,  அகராதியும் வேறுதான்.

புறத்தில் தோன்றும் காட்சிகளால், உள்ளத்தில்  தோன்றும்  அன்பின் வெளிப்பாடே, நட்பாகவும், பந்தமாகவும், பாசமாகவும், கருணையாகவும், காதலாகவும்  பரிணமிக்கிறது.

அந்த அன்பே  அகத்தில் தவத்தின் வெளிப்பாடாக தோன்றும்போது, பக்தியாகி, சக்தி நிலை தூண்டப்பெற்று பேரின்பத்தையம், சித்திகளையும்  தருகிறது.


உறங்கும்            அளவின்            மனோன்மணி வந்து
கறங்கு                 வளைக்கைக்  கழுத்தாரப்        புல்லிப்
பிறங்கொளித்  தம்பலம்            வாயில்                 உமிழ்ந்திட்டு
உறங்கல்             ஐயாஎன்று        உபாயம்              செய்தாளே.
                                                                                                         - திருமந்திரம் 1107

சீரிய தவ உறக்கத்தில், ஆக்கிணை சக்கரத்தில் வீற்றிருக்கும் அன்னை பராசக்தி, வளைக்கர  நாதத்தோடு கழுத்தினை  இறுக்கி அணைத்து, உள்நாக்கின்  மேலண்ணத்தில் சக்தியின் ஆதாரமான அமிழ்தம் ஊறச்செய்து, தொடர்ந்து தவ உறக்கத்தில் இருக்கும் வழிதனை  காட்டி நின்றாள். 

Friday, May 8, 2020

ஆதி பராசக்தி

ஆதி பராசக்தி


டவுனுப்பக்கம் போகாதீங்க
மாப்பிளே
டவுனாயிப்போயிருவீங்க





சென்னைப்பக்கம் போகாதீங்க
மக்களே
செல்லரிச்சுப் போயிருவீங்க

'ஊசி மூஞ்சி மூடா, எனக்கே புத்தி சொல்கிறாயா. உன்னை என்ன செய்கிறேன் பார். உன்னுடைய கூட்டை   பிய்த்து எறிகிறேன்' - மழைக்கு ஒதுங்க ஒரு வீடு கட்டலாம் அல்லவா  என்று கேட்ட குருவியின் கூட்டை கலைக்க வேகமாக பனை மரத்தில்  ஏறியது குரங்கு.

இயற்கை எரிபொருளா? தூக்கிவை  உள்ளே அவனை. உலகமே எதற்காக  ஒருமித்த குரலில் இணைந்து கொரோனாவை வளர்க்கிறது என்று பொருள் சொன்னவனை உள்ளே போடு. நம் பாரம்பரிய மருந்தே போதும் என்று சொன்னால், சும்மா விடக்கூடாது  அவனை. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று விளக்கி சொல்ல பொறுமை இல்லை அரசிடம்.

மாற்று கருத்து சொன்னாலே போதும், என்கவுண்டர் நிச்சயம் என்றாகிவிட்டது. மக்கள் சிந்திக்கவே கூடாது. காரண காரியங்களோடு சிந்தித்து சொல்லும் புத்திமதியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் இல்லை, எல்லாம் குரங்கு புத்தி. மதுப்பிரியர்களின் பணமும், வாக்குகளும்  தேவை.

நம் உடலும் அரசு மாதிரிதான்; உள்ளே உயிர் இருப்பதையோ, சக்தியாக நின்று உடலை இயக்கும் பேராற்றலையோ உணர்வதே இல்லை.  தொடர்ந்து நம் உடலில் இருந்து தரும் அறிவுரைகளை அறியவொண்ணா மூடர்களாக இருக்கிறோம்.

அவளை          அறியா    அமரரும்       இல்லை
அவளன்றிச்  செய்யும்  அருந்தவம்  இல்லை
அவளன்றி     ஐவரால்    ஆவதொன் றில்லை
அவளன்றி     ஊர்புகு     மாறு             அறியேனே.
                                                                                - திருமந்திரம் 1053

ஆதிசக்தியே   உடலில் நின்று ஆட்சி செய்வதை   உணர்ந்தவர்கள் தேவர்கள் ஆனார்கள். அந்த உணர்வினை அடையவும்,  ஐம்புலன்களின் உறுதுணையால் தவம் செய்யவும், இறையடி சேரவும் முடியும்.

Sunday, May 3, 2020

பேரழிவு

பேரழிவு 

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே..





'அரசே, நம் நாட்டில் அதிகம் இருப்பது வைத்தியர்களே' - கிருஷ்ண தேவராயரின் சந்தேகத்திற்கு தெனாலி ராமன் தீர்க்கமான உடனடி பதில் அளித்தான்.

'ஆனால், அவர்கள் வைத்தியம் கற்றவர்களல்ல. தாங்கள் கண்டதையும், கேட்டதையும், தங்களின் அரைகுறை அனுபவத்தில் அறிந்து கொண்டதைக்கொண்டு எல்லா வித நோய்களுக்கும் உடனடி மருத்துவ தீர்வு சொல்லி விடுவார்கள்.'

மருத்துவம் கற்க மழலையர் பள்ளியில் ஆரம்பித்து, நீட் தேர்வு வரை கற்க வேண்டிய அவசியம் இல்லை இவர்களுக்கு.

அதே அறிவு நிலைதான் இயற்கை மற்றும் பரம்பொருளைப் பற்றியும். 

'மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்'

இந்த மண்ணுலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தம் என்று இந்த கோவிட்-19 பெருந்தொற்று உணர்த்திவிட்டது. 

இயற்கையை கற்க, அதனை சொந்தம் கொண்டாடும் பற்றினை அழித்து, அதனுடன் இணைந்து வாழும் முறையை அறிந்து கொள்வது அவசியம்.

மாயை என்னும் பற்றினை அறுத்து, பரம்பொருளை அறிந்து உணர்ந்து கொள்ள முன்னோர்கள் கட்டிய மழலையர் பள்ளிகள்தான் கோவில்கள்.

பற்றறுக்க ஒரே வழி, பற்றற்றவனான பரம்பொருளின் பற்றினை பற்றுவதுதான் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

                                                       - திருக்குறள் 350

திருமூலர் அதற்கும் ஒருபடி மேலே சென்று, பிறவிப் பெருங்கடல் நீந்தி அந்த பரம்பொருளின் பாதங்களை அடையும் ஆசையையும் அழித்து, ஆனந்தமாய் வாழுங்கள் என்கிறார்.

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் 
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் 
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் 
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
                                                    - திருமந்திரம் 2615 

Saturday, May 2, 2020

பேரிடர்

பேரிடர்



துன்பம் வரும்
வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வச்சார்
வள்ளுவரு சரிங்க





'என்ன கொடுமை சரவணன்' - எதிர்த்த வீட்டு நண்பன் குமாரின் நெற்றியில் ஒட்டியிருந்த பேண்ட் எயிட்டை பார்த்து கிண்டலாக கேட்டான் சேகர்.

'ஒண்ணுமில்ல. போன வாரம் உனக்கு. இந்த வாரம் எனக்கு, வீட்டுல பூஜை. பொண்டாட்டிய பாத்து சிரிச்சிட்டே வீட்டுக்குள்ள போனேனா...'

'சரி'

' எதுக்கு  செங்கொரங்கு இளிச்சிட்டே வர்றேன்னு கேட்டா. வள்ளுவர் வழி நிக்கிறேன்னு சொன்னேன். கையிலிருந்த தோசை திருப்பியாலெ  நெத்தியிலே திருப்பிட்டா.'

'புரியிற மாதிரி சொல்லேண்டா. யாராவது வள்ளுவர் வழி நிக்கிறதுக்கு அடிப்பாங்களா'

'துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு வள்ளுவர் சொல்லி இருக்கார். அதனாலதான் சிரிச்சேன்னு, அவளை பாத்துட்டே சொன்னதுதான் தெரியும்'

சேகர்  சிரிச்சிட்டே திரும்பி பார்த்தான். அவர்கள் பேசியதை  ஒட்டு கேட்டுக்கொண்டிருந்த  அவன் மனைவி சரளா, எதிரில்.

'செத்தாண்டா சேகரு..'

'கடவுள் இருக்கான் குமாரு. ஓடிரு.'

எல்லாம் லாக் டௌன் பரிதாபங்கள்.

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப  தில்.
                                                                  - திருக்குறள் 621

ஒரு காரியத்தை செய்யத் துணியும் போது  இடற்கண் எனும் தடைகள்  வருவது இயற்கை. அதனை எதிர்த்து, எள்ளி நகையாடி  அழித்து காரியத்தை சாதிக்க வேண்டும். காரியம் வெற்றி அடையும்போது அடையும் இன்பத்திற்கு ஈடானது ஒன்றுமில்லை.

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின்று  ஆதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கு ஒரு கல்பசு ஆமே.
                                                               - திருமந்திரம் 308

உயிரில் எழும் எண்ணங்களின் ஆதார சொரூபமான ஆதி இறையை . எண்ணி போற்றுவோர்க்கு வாழ்வின் பற்று கோலாய்   இருப்பான். இல்லை என்றெண்ணி இகழ்வோர்க்கு எண்ணங்கள் பற்று கோல் அற்ற முல்லைக்கொடி போல், வாழ்க்கை  துன்பத்தில் தவிக்கும். உணர்வு மகிழ்வுடன் ஆதி இறையை உணரமாட்டார்க்கு, அவருள் உறையும் உயிர், ஒரு கல்லாலான பசுவைப்போல் வாழ்வின் பலன் ஏதும் தராது.



Sunday, April 26, 2020

பேரொளி


பேரொளி 

B.  O.  Y.   பாய், பாய்னா பையன்
G.  I.  R. L.  கே[ர்]ள், கே[ர்]ள்னா பொண்ணு
இந்த பொண்ணைக்  கண்டதும்
ஏதோ போதை உண்டாகுதே..


கையால் மேனியை                                                                                                                    தொட்டால் உண்மையில                                                                                                    கரன்ட்டு  போல் ஷாக் அடிக்குதம்மா 

'சூரிய ஒளிக்கதிர்களை நோயாளிகளின் உடலில் பாய்ச்சுங்கள். பெருந்தொற்றை ஒழிக்க இதுவே வழி' - அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் கண்டுபிடிப்பை TV-யில் அறிவித்துக்கொண்டிருந்தார்.

இந்திய விஜயத்திற்குப்பின் ட்ரம்பின் அணுகுமுறை இந்தியர்களை போலவே இருக்கிறது, என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது மாடிப்படிக்கட்டில் யாரோ இறங்கி ஓடும் சப்தம் கேட்டது  ரகுவிற்கு.

'அது ஒண்ணுமில்லீங்க, எதோ ரெண்டு சின்னங்சிறுசுங்க மொட்ட மாடில பேசிட்டிருந்திருக்காங்க. நம்ம சின்னாத்தா போய் சத்தம் போடுது' - வெளியே வந்த ரகுவிற்கு பக்கத்து யூனிட்காரர் விளக்கினார்.

சப்தம் கேட்ட வினாடி நேரத்துக்குள், அந்த குடியிருப்பு முழுவதும் மின்னல்  பாய்ச்சும்  ஒளிவெள்ளம் போல், அரக்க பரக்க பேச ஆரம்பித்து விட்டார்கள், அந்த சின்னஞ்  சிறுசுகளைப்பற்றி.

'கலி முத்திருத்தோன்னோ..' - ஆறு குழந்தைகளை, வருஷாந்தரமா பெற்றெடுத்த,  எதிர்த்த யூனிட்  வயதான மாமி அங்கலாய்த்துக்கொண்டாள்.


மேல்ஒளி கீழதன் மேவிய மாருதம்
பால்ஒளி அங்கி பரந்தொளி ஆகாசம்
நீர்ஒளி செய்து நெடுவிசும்பு ஒன்றிலும்
மேல்ஒளி ஐந்தும் ஒருங்கொளி ஆமே.
                                                                      - திருமந்திரம் 2685
பிரபஞ்சமாய் பரிணமித்திருக்கும் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், இவற்றில் நீக்கமற ஒளிரும் ஒளி,  உடலுக்குள்ளும்  ஒடுங்கி ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. 

விளங்கொளி மின்ஒளி ஆகிக்  காந்து
துளங்கொளி ஈசனைச் சொல்லும் எப்போதும்
உளங்கொளி ஊனிடை நின்று உயிர்க்கின்ற
வளங்கொளி எங்கும் மருவி நின்றானே.
                                                                      - திருமந்திரம் 2687
'ஓம்' என்றும் 'ஓம் நமக்ஷிவய' என்று தியானித்து சொல்லும்போது உடலில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளியானது, மின்னலைப்போல் உடலுக்குள் ஒளிரும் தன்மை பெரும். 

விளங்கொளி அவ்ஒளி  அவ்இருள் மன்னும்
துளங்கொளியான் தொழு வார்க்கும் ஒளியான்
அளங்கொளி ஆரமுது ஆகநஞ்சு ஆரும்
களங்கொளி ஈசன் கருத்து அதுதானே.
                                                                       - திருமந்திரம் 2688
மின்னலைப்போல் ஒளிரும் அமிர்தம் போன்ற ஒளியானது, உடலில் உள்ள நஞ்சினை முறிக்கக்கூடிய தன்மை பெரும்.

மேற்கத்திய நாடுகள், கண்ணின்  புறத்தே காணும் பொருள்களில் கொள்ளும் ஆர்வமும், கிழக்கத்திய நாடுகள்  கண்ணின்  அகத்தே உள்ள சூக்கும நிலைகளில் கொள்ளும்  ஆர்வமும்  வேறு வேறானவை அல்ல.

Wednesday, April 22, 2020

பேரவலம்


பேரவலம் 

வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை யாரோ..








'நீங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பது டீசர் மட்டுமே. முழுப்படம் காணத்தயாராகுங்கள்' - உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உலக மக்களுக்கு கொரோனா  தாக்குதல் பற்றி அறிவுறுத்திக்கொண்டிருந்தார்.

'செய் அல்லது செத்து மடி'- போய், வழக்கமான காரியங்களை 'செய், உடனே செத்து மடி' ஆகி விட்டது.

உலக முதன்மை வல்லரசு, அமெரிக்க   நாட்டின்  இறப்பு செய்திகளே இப்படி என்றால், ஈகுவடார் போன்ற நாடுகளில் இருந்து கசியும் செய்திகள் அதிபயங்கரமானவை, பெருந்தொற்றால் வந்த பேரவலம்.


மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயான மட்டே, வழிக்கேது துணை
தினையா மளவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆளவென்றும் பரலோகம் சித்திக்கும் சாத்தியமே.
                                                                           - பட்டினத்தடிகள் பொது 12

மனையாளும், மக்களும், சுற்றமும் கூட இனி இல்லை என்றாகிவிட்டது. பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தாலே பெரிய நிம்மதி என்றாகிவிட்டது.

வளத்துஇடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்
குடம்உடைந்தால் அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந்தால் இறைப் போதும் வையாரே.
                                                                                               - திருமந்திரம் 158

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, நொடிப்பொழுதும் இறந்த உடலை வைத்திருக்க மாட்டார்கள் என்ற வாக்கு எப்படி மெய்ப்பட்டிருக்கிறது பாருங்கள்.

யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.
                                                                                               - திருமந்திரம் 252


சொர்கமான இந்த மண்ணை நரகமாக மாற்றிவிட்டோம் என்று இறைவனிடம் மன்னிப்பு கோரும் வண்ணம்,  வெற்றிலையை  படைத்து மன்னிப்பு கேட்போம். நம்மை சார்ந்து வாழும் உயிரினங்களுக்கு ஒரு வாய் உணவாவது வழங்குவோம். அண்டை, அயலில் வாழும் திக்கற்ற மக்களுக்கு ஒரு கைப்பிடி அளவாவது உணவுப்பொருளை கொடுப்போம். நாமே திக்கற்றவர்களாக இருப்பின், நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி தேற்றுவோம்.

இனி, செய்வதற்கொன்றுமில்லை.






Sunday, April 19, 2020

முதல் எதிரி

முதல் எதிரி 

இந்த பூமியிலே  எனக்கெதிரி
உம்புடவையை போலேது





'சாமி, பூதம் இதே  வேலையா போச்சு உங்களுக்கு. பொழுதோட வேலைக்கு வரோணும்னு தெனோஞ்சொல்லோணும்' - என்று அதிகாரமாக சொல்லிக்கொண்டிருந்தார், எட்டுப்பட்டி மிராசுதார்,
'சாமி கும்புட்டு வந்தேனுங்க சாமி. கொஞ்சம் பொழுதாயிருச்சு'- என்று குனிந்து சொல்லிக்கொண்டிருந்த வேலையாளுக்கு.

அவரைப்பொறுத்த மட்டில் திருவிழா நேரத்தில், முதல்  மரியாதை பெற கோயிலுக்கு போவதோடு சரி. மற்றபடிக்கு சாமி, பூஜை  என்பதெல்லாம் வீணான வேலை.

அதே நேரம், பேய், பிசாசு என்றால் அதீத பயம். கேரளா மாந்த்ரீகர்களை கொண்டு அடிக்கடி சிறப்பு பரிகாரங்களை செய்ய சொல்வார். இருட்டி விட்டால் வெளியே போவதென்பதே அவர் வாழ்க்கையில் கிடையாது. இளம் பிராயத்தில் நடந்த சின்ன சின்ன பயமூட்டும் நிகழ்வுகள் அவர்  ஆழ்மனதில் பதிந்து போயிருந்தது. அடிக்கடி அந்த எண்ணங்கள் மனதில் தோன்றி அவரை நிலை கொள்ளாமல் செய்து விடும்.

உயிரையும், உடலையும் ஆளும்  காரணிகளை தெரிந்து கொண்ட மனிதனால், எண்ணங்களை அறிந்து கொள்ளும் வழிமுறையை வகுத்து சொல்ல முடியவில்லை.

உயிர்:
முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்குச்
செப்பரிய சிவம் கண்டு தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்து இருந் தாரே.
                                                                  - திருமந்திரம் 126

முப்பத்தாறு பிரதம தத்துவங்கள் மனிதனின் ஆன்மாவை ஆளுகின்றது. இதனை அறிந்துகொண்டு வழி நடப்பவர்கள் இறைநிலை கண்டு ஆனந்த வாழ்வில் லயித்திருப்பர்.

உடலும் உயிரும்:
முப்பதும் முப்பதும் முப்பத்து அறுவரும்
செப்ப மதிள்உடைக் கோயில்உள் வாழ்பவர்
செப்ப மதிள்உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
                                                                  - திருமந்திரம் 154

மொத்தம் தொண்ணூற்றாறு தத்துவங்கள் மனிதனின் உடலையும், உயிரையும் அடிப்படையாக கொண்டுள்ளது. உடலான கோயில் அழியும்போது இந்த தத்துவங்கள் மறைந்து விடும்.

மனமும் எண்ணமும்:
மன சந்தியில் கண்டமன் நனவாகும்
கனவுஉற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவு என்ப
இனம் உற்றான்நந்தி ஆனந்தம் இரண்டே.
                                                                  - திருமந்திரம் 2613

ஐம்புலன்களால் பெரும் உணர்வுகளை கொண்டு நனவு வாழ்வு அமைகிறது.
புலன்கள் செயலற்ற தூக்க  நிலையில் கொள்ளும் உணர்வு கனவாகிறது. இவையல்லாமல், எண்ணங்களற்ற  அறிவோடு இயைந்த உணர்வே  பேரின்பமான ஆனந்தமாகிறது.

ஐம்புலன்களால் பெரும் உணர்வுகளை, மனம் எண்ணங்களாக  மாற்றி  நனவு வாழ்வில் அலைக்கழிப்பை அளிக்கிறது.

எண்ணங்களே மனிதனின்  முதல் எதிரி.

ஒளிக்கதிர்

ஒளிக்கதிர்  உடல் கண்ணுக்கு தெரிகிறது. உயிர் கண்ணுக்கு தெரிவதில்லை. கண் முன்னர் உயிரோடு இருந்தும், விடை காண முடியாத எத்தனையோ மாயைகளில் இதுவும...